புதுச்சேரி

மடுகரை எம். ஆர் சுப்புராயன் அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடையை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

மாணவர்களுக்கு இலவச சீருடை

Published On 2023-05-31 13:52 IST   |   Update On 2023-05-31 13:52:00 IST
  • துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
  • விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை எம்.ஆர். சுப்புராயன் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று வடுவகுப்பம், பண்டசோழ நல்லூர், நெட்டப்பாக்கம், சூரமங்கலம், ஏரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

Tags:    

Similar News