புதுச்சேரி

கோப்பு படம்.

null

தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-04 05:19 GMT   |   Update On 2023-08-04 05:20 GMT
  • தீயணைப்பு வீரர்களில் ஆண்கள் 39, பெண்கள் 19 என மொத்தம் 58 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
  • புதுவை உள்துறை வெளியிட்ட அரசாணைப்படி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவல்துறையை தொடர்ந்து, யூ.டி.சி. தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

எல்.டி.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை உள்துறை சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை தீயணைப்பு துறையில் 5 நிலைய அதிகாரி, 58 தீயணைப்பு வீரர் பணியிடம் நிரப்ப கடந்த 2022 நம்பர் 11-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதுவை உள்துறை வெளியிட்ட அரசாணைப்படி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

புதுவையை சேர்ந்த ஆண், பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தீயணைப்பு நிலைய அதிகாரி பணியில் ஆண்கள் 3, பெண்கள் 2 என மொத்தம் 5 இடங்கள், தீயணைப்பு வீரர்களில் ஆண்கள் 39, பெண்கள் 19 என மொத்தம் 58 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

அதிகாரி பணிக்கு இளநிலை, வீரர் பணிக்கு பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி மாலை 5.45 மணி வரை அரசின் இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News