புதுச்சேரி
- தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
- தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாலை லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே தனியார் ஓட்டல் உள்ளது.
ஓட்டலின் தேவையற்ற பொருட்கள் போட்டு வைத்திருந்த பகுதியில் அதிகாலை 1 மணியளவில் திடிரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அதனை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சில ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.
தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.