புதுச்சேரி

கோப்பு படம்.

விவசாயிகளுக்கு பயிர் கடன் மீண்டும் வழங்க வேண்டும்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் வேளாண் கூட்டுறவு சங்கம் மனு

Published On 2023-02-12 10:44 IST   |   Update On 2023-02-12 10:44:00 IST
  • கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.
  • விவசாய பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி:

அங்காளன் எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை சோரப்பட்டு வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சீதாராமன், துணைத் தலைவர் யுவ ராஜ், இயக்குனர்கள் மாரி முத்து, ராமகிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்களை தள்ளுபடி செய்வதாக சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால், தற்போது கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள விவசாய உறுப்பினர்கள், புதிதாக பயிர் கடன் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், விவசாய பயிர் கடன் தள்ளு படி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றி, விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நட வடிக்கை எடுக்க வேண் டும்

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News