புதுச்சேரி
கோப்பு படம்.

என்ஜினியர் வழக்கில் பெண்ணின் முன்ஜாமீன் தள்ளுபடி

Published On 2023-04-18 08:34 GMT   |   Update On 2023-04-18 08:34 GMT
  • போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.
  • மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.

புதுச்சேரி:

புதுவை முத்துபிள்ளை பாளையத்தை சேர்ந்தவர் குசும்குமாரி மகன் விஷால் பொறியியல் இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, நடுரோட்டில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.

ஓதியஞ்சாலை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போதை கும்பலை சேர்ந்த நவீன்குமார், கார்த்திக் சங்கர், சூர்யகுமார், அருண்தாமஸ், முகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.

வழக்கில் சிறையில் உள்ள அருண் தாமஸ் ஜாமீன் கேட்டும், மோனிஷா முன்ஜாமீன் கோரியும் கடந்தவாரம் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News