புதுச்சேரி
மீன் அங்காடி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
- முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
- ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மைய உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி இணைந்து வேலைவாய்பு முகாமை (3-ந் தேதி) கொட்டுப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலை நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் நடத்துகிறது.
காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் முகாமில் தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ங்கள் பங்கேற்கின்றன.
முகாமில் பிளஸ்-2 தேர்ச்சி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பொறியியல் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயரிம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.