சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனுக்கு கத்தி குத்து
- பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
- ரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்
புதுச்சேரி:
பாகூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்குள்ள சாராயக் கடையில் இருந்த போது அவருக்கும் பாகூர் மூலநாத நகரை சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அங்கி ருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பிரவீன்குமார் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித் குமார் என்னிடமே தகராறு செய்கிறாயா? எனக் கூறி அங்கு கிடந்த கல்லை எடுத்து பிரவீன் குமாரை தாக்க முயன்றார்.
ஆனால் பிரவீன்குமார் கீழே குனிந்து கொண்டதால் அந்த தாக்குதலில் இருந்து தப்பினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அஜித் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமாரின் முதுகில் குத்தினார்.
மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அஜித் குமார் தப்பியோடி விட்டார். இந்த கத்தி குத்தில் காயமடைந்த பிரவீன் குமார் பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.