கல்வி கருத்தரங்கில் தமிழ்த்துறை தலைவர் சிவசண்முகநாதன் பேசினார். அருகில், பதிவாளர் தட்சணாமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.
வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரியில் கற்பித்தலில் புதுமைகள் கல்வி கருத்தரங்கம்
- கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார்.
- மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் வெங்க டேஷ்வரா கல்வியியல் கல்லுாரியில் 'கற்பித்தலில் புதுமைகள்' தலைப்பில் மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார். துணைத்தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கல்லுாரியின் முதல்வர் டையன் ஜோசப் வரவேற்றார். கருத்தரங்கில் கல்லூரி யின் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள்
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தற்கால சூழல்களில் கற்பித்தல் முறைகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கைநுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறித்து சி.கே கல்வியியல் கல்லூரி முதல்வர் சிங்கரவேலன், சிகா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், வாசவி கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் துளசிராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் சிவசண்முகநாதன் தொகுத்து வழங்கினார்.
ஆங்கிலத்துறை பேராசிரி யர் ஈவா எழில்மலர் நன்றி கூறினார்.