புதுச்சேரி

கோப்பு படம்.

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-08 08:06 GMT   |   Update On 2023-08-08 08:06 GMT
  • லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்
  • பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட் சேத்திலால் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் கார் டிரைவர் இவருக்கு துளசி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

பிரபாகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி துளகி கண்டித்து வந்தார். ஆனாலும் பிரபாகரன் மது பழக்கத்தை கைவிட வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி வீட்டில் கடன் தொல்லை இருக்கும் நிலையில் இது போன்ற சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து செலவழித்தால் கடனை எப்படி திருப்பி கொடுப்பது என சத்தம்போட்டார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது தொடர்ந்து வாக்குவாதம் செய்தால் பிரச்சினை வரும் என கருதிய துளசி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டின் மாடிக்கு செல்லும் கைப்பிடியில் கணவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துளசி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்திவருகிறார்கள்.

Tags:    

Similar News