டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்-போலீசார் மீது பரபரப்பு புகார்
- புதுவை நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வசந்தி திருநங்கை. இவர் அரியாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார்.
- பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் வசந்தி(37), திருநங்கை. இவர் அரியாங்குப்பம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 3 காவலர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். அவர்கள் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.
இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த திருநங்கைகள், காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தகவலறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா திருநங்கைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினார். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார்.இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.