புதுச்சேரி

கோப்பு படம்.

தனியார் பள்ளி தாளாளருக்கு கொலைமிரட்டல்

Published On 2023-02-02 04:54 GMT   |   Update On 2023-02-02 04:54 GMT
  • வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் . இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
  • மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.

இந்தப் பள்ளிக்கு அருகில் மணிமாறன்.என்பவர் வசித்து வருகிறார். இவர் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டிருந்த நிலையில் மணிமாறன் அத்துமீறி பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளரை தரக்குறைவாக திட்டினார்.

மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தாளாளர் குப்பம்மாள் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் மணிமாறனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News