புதுச்சேரி

ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.

ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு

Published On 2023-08-29 05:57 GMT   |   Update On 2023-08-29 05:57 GMT
  • மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த பி ள்ளையார் குப்பம் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலை கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல் கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோபால் கிருஷ்ணபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 40 மாணவர்கள், சென்னை ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

மேலும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன், 804 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 554 பேர், ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 250 பே ர் அடங்குவர்.

2-வது நாளாக நடை பெற்ற பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் அஜய் லோகினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் பதக்கம் வென்ற 27 மாணவர்கள், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் பதக்கம் வென்ற 26 மாணவர்களுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

தொடர்ந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக வேந்த ர், இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் 163 பேருக்கும், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியை சேர்ந்த 264 பே ருக்கும் பட்டங்களை வழங்கினார்.

விழாவில் முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

Tags:    

Similar News