புதுச்சேரி

 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக ஜீப் ஜெப்தி செய்ததாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

கொம்யூன் பஞ்சாயத்து கார்-பொருட்கள் ஜப்தி

Published On 2023-06-12 14:15 IST   |   Update On 2023-06-12 14:15:00 IST
  • கோர்ட்டு உத்தரவின் படி நடவடிக்கை
  • கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதி இளவரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு பிளம்பராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்த நபருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆனால் இந்த உத்தரவை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் செயல்படுத்தவில்லை.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி புதுவை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாத அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதி இளவரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்  கோர்ட்டு அபினாக்கள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றனர். அங்குள்ள ஜெனரேட்டர், கார், ஜீப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாத வகையில் அதன் மீது நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

இதனை பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News