புதுச்சேரி

ஈச்சங்காடு பகுதியில் இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்

சவ ஊர்வலத்தில் மோதல் 2-வது நாளாக போலீஸ் குவிப்பு

Published On 2023-07-19 13:35 IST   |   Update On 2023-07-19 13:35:00 IST
  • இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில், ஈச்சங்காடு கிராம த்தைச் சேர்ந்த இருவர்கள் பனித்திட்டு பகுதிக்கு வந்து மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பனித்திட்டு இளைஞர்கள் ஓன்று திரண்டு சுமார் 50 பேர் மீண்டும் ஈச்சங்காடு கிராமத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு சென்று இருந்த நிலையில் அங்குவந்த கும்பல் அங்கு இருந்த தடி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை அடித்து நொறுக்கினர். வீடுகள் மீதும் கல் வீசி தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் ஈச்சங்காடு கிராம மக்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர். இதில், சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், கலைச்செல்வன் தலைமை யில் இரு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடு த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பனித்திட்டு பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரசாந்த் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.

Tags:    

Similar News