புதுச்சேரி

மோகன் ராஜ்.

சிலம்ப பயிற்சியாளர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-08-21 13:48 IST   |   Update On 2023-08-21 13:48:00 IST
  • தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற மோகன்ராஜ்.
  • திருமணம் ஆகாத இவர் பிள்ளையார்திட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் என்ற மோகன்ராஜ். திருமணம் ஆகாத இவர் பிள்ளையார்திட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சிலம்ப கலையில் கை தேர்ந்த இவர் சிலம்ப பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குடி பழக்கம் இருந்த நிலை யில் சிலம்ப பயிற்சிக்கும் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சத்திய ராஜ் அதிக குடி போதையில் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அவரது உறவினர்கள் சத்தியராஜை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சத்தியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது தாயார் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News