புதுச்சேரி

கோப்பு படம்.

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

Published On 2023-10-14 14:02 IST   |   Update On 2023-10-14 14:02:00 IST
  • அ.தி.மு.க. வலியுறுத்தல்
  • ரூ.400 கோடிக்கான திட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை. இந்த நிதிமுடங்கிவிடும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை பத்திரப்பதிவு த்துறையில் அனுமதியின்றி விளைநிலங்களை குழி கணக்கில் விற்பனை செய்வது, போலி பத்திரம் தயாரிப்பது, உயில் பத்திரங்களை மாற்றுவது என பல்வேறு முறை கேடுகளில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக பலமுறை புகார் கூறியுள்ளோம்.

தற்போது இந்த முறைகேடுகள் தொடர்பாக புதுவை அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி.யால் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரணைக்கு செல்ல முடியாது. அதனால் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்து க்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

அரசு பள்ளி மாணவ ர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடை இறுதிநேரத்தில் அறிவித்து சென்டாக் கலந்தாய்வு நடத்தினர். இதனால் ஆரம்பத்தில் மருத்துவக்கல்வியில் மெரிட் லிஸ்டில் இடம்பெற்ற சில மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவ கல்லூரிரியில் மொத்தம் 22 என்.ஆர்.ஐ. இடங்களில் 10 மட்டுமே நிரம்பியுள்ளது.

மீதமுள்ள 12 என்ஆர்ஐ இடங்களை ஏற்கனவே மெரிட் லிஸ்டில் இடம்பெ ற்ற மாணவர்க ளுக்கு வழங்க வேண்டும். அவர்க ளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெறவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவை அரசு 50 சதவீத நிதியும், மத்திய அரசு 50 சதவீத நிதியும் வழங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியில் 5 ஆண்டும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை நிறை வேற்றவில்லை. இதனால் மத்திய அரசு நிதி வீணடிக்கப்படடது. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆன பிறகும் ரூ.200 கோடிதான் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்துள்ளது. அடுத்து ஆண்டு ஜூன் மாதத்தோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட காலக்கெடு முடிவடைகிறது.

இந்த நிலையில் ரூ.400 கோடிக்கான திட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லை. இந்த நிதிமுடங்கிவிடும் அபாயம் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு விரைவுபடுத்த வேண்டும். ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News