புதுச்சேரி

கோப்பு படம்.

கஞ்சா விற்பனை அமோகம்

Published On 2023-06-08 06:29 GMT   |   Update On 2023-06-08 06:29 GMT
  • புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.
  • மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மது பாட்டில்களை விட குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சா விற்கப்படுவதால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள்வரை கஞ்சா பழகத்துக்கு ஆளாகிவுள்ளனர்.

சமூக விரோதிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா வை கடத்தி வந்து புதுவையில் விற்பனை செய்கிறார்கள்.

இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கஞ்சா விற்பனை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.

இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு அவ்வப்போது கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் ஆனாலும் புற்றீசல் போல கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரியாங்குப்பம்-தவளகுப்பம் மற்றும் கிராம பகுதிகளில் பள்ளி - கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன் தினம் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அதுபோல் காலாப்பட்டு பல்கலைக்கழகம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தவளகுப்பம் முத்து முதலியார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளகுப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று கண்காணித்தனர்.

இந்த நிலையில் சந்தேகப்படும் படியாக இருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அங்கு 2 பேர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் பிடிபட்ட 2 பேர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் மாவட்டம் எஸ்.எம். சாவடியை சேர்ந்த சந்தோஷ்  மற்றும் 17 வயது சிறுவர் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 38 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன் ஒரு பைக் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News