புதுச்சேரி

தொழிலதிபர் டி.ஆர்.சரவணன் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த காட்சி.

தொழிலதிபர் டி.ஆர். சரவணன் தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2023-07-30 06:21 GMT   |   Update On 2023-07-30 06:21 GMT
  • நகைக்கடை உரிமையாளரும் தொழிலதி பருமான டி.ஆர்.சரவணன் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் உடன் தி.மு.கவில் இணைந்தார்.
  • டி.ஆர்.சரவணனுக்கு அமைச்சர் பொன்முடி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த பாப்பாஞ்சாவடியில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான புகழேந்தி, விழுப்புரம் தொகுதி லட்சுமணன் எம்.எல்.ஏ, மாநில ஆதிதிராவிடர் நல பிரிவு துணை அமைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் பி.கே.டி.முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு லட்சுமி ஜூவல்லரி நகைக்கடை உரிமையாளரும் தொழிலதி பருமான டி.ஆர்.சரவணன் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் உடன் தி.மு.கவில் இணைந்தார்.

டி.ஆர்.சரவணனுக்கு அமைச்சர் பொன்முடி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் புவனே ஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், தொகுதி அவைத் தலைவர் சங்கர், பொருளாளர் சம்பத், மாவட்ட பிரதிநிதிகள் பாலு, கே.ஜி.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அருண், ஹென்றிதாஸ், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், ஏழுமலை, சங்கர், குமார், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News