புதுச்சேரி

புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்ற காட்சி.

புதுவை இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம்

Published On 2023-06-18 08:11 GMT   |   Update On 2023-06-18 08:11 GMT
  • மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
  • துவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

ராகுல் காந்திக்கு நாளை திங்கட்கிழமை 53-வது பிறந்தநாள்.

ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முகாமை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.முகாமில்

காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், முன்னாள் துணைத் தலைவர் ரகுபதி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News