நர்சிங் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்த காட்சி.
மயிலம் நர்சிங் கல்லூரியில் ரத்ததான முகாம்
- மயிலம் நர்சிங் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார்.
புதுச்சேரி:
மயிலம் நர்சிங் கல்லூரி யில் மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
மயிலம் சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோரின் வழிகாட்டு தலின் படி ரத்ததான முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். இயக்குநர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார். இதில் மயிலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் கிரிஜா மற்றும் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பாரதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் மயிலம் கல்வி குழும மாணவர்கள், பேராசிரியர்கள் ஆசிரி யர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் மாணவர் செவிலியர் சங்கத்தின் பேராசிரியர் வைஷ்ணவி நன்றி கூறினார்.