புதுச்சேரி
கோட்டக்குப்பம் பள்ளிவாசலில் ரத்ததான முகாம்
- புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.
- அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.
கோட்டக்குப்பம் பர்கத் நகரில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
இதில், கிளைத் தலைவர் சல்மான், கிளை செயலாளர் ஹசன், மற்றும் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், அப்துல் ரகுமான், அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.