புதுச்சேரி
- மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
- புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கதிர்காமம் அருகே தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேன்மொழி. கடந்த சில நாட்களாக கணவன்-மனை விக்கி டையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் அவர்களிடைேய குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.