புதுச்சேரி

கோப்பு படம்.

நோய் கொடுமையால் ஆட்டோ டிரைவர் சாவு

Published On 2023-03-26 05:36 GMT   |   Update On 2023-03-26 05:36 GMT
  • புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி.
  • கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை.

புதுச்சேரி:

புதுவை மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி. சிவக்குமார் ஆட்டோ ஓட்டி வந்தார். இவர்களுக்கு சூர்யா, அய்யனார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இதையடுத்து கடந்த 20 நாட்களாக சிவக்குமார் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை. சிவக்குமாரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி முத்துலட்சுமி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News