புதுச்சேரி
சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல்
- கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி
- வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி பானுமதி இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த குமார் குடும்பத்தினருக்கும் வீட்டு மனை பிரச்சினை தொடர்பாக சொத்து தகராறு உள்ளது.
சம்பவத்தன்று பானுமதி அக்பர் நகரில் உள்ள குமரேசன் என்பவர் வீட்டின் எதிரே நடந்து சென்றார். அப்போது பானுமதியை வழிமறித்து குமார், இவரது மகன் தினேஷ், மாரிமுத்து மகன் பிரேம், குமார் மனைவி ரஞ்சிதம் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்கள் பானுமதியை கையாளும் இரும்பு பைப்பாலும் தாக்கினர். இது குறித்து பானுமதி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் பானுமதியை தாக்கிய தினேஷ், குமார், பிரேம், ரஞ்சிதம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.