புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு உலக தமிழ் காப்புகூட்டியக்கம் பாராட்டு தெரிவித்த காட்சி.

உலக தமிழ் காப்புகூட்டியக்கம் பாராட்டு

Published On 2023-06-12 14:02 IST   |   Update On 2023-06-12 14:02:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மாநாட்டில் தமிழக செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.

புதுச்சேரி:

உலக தமிழ்க்காப்பு கூட்டியக்கம் சார்பில் கல்வி கூடங்களில் தமிழ் ஆட்சி அலுவலக மொழி யாகத்தமிழ், திருக்கோவில்களில் தமிழ், நீதிமன்றங்களில் தமிழ் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் எழுச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது.

அதன்படி சேலம், நாமக்கல் மாவட்டங்களின் மாநாடு ராசிபுரத்தில் நடந்தது. மாநாட்டில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.

மேலும் மாநாட்டு தலைவரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பிரமணியன் பேசினார்.

நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிறவை ஆதினம் குமரகுருபர அடிகளார், உலக தமிழ்க்காப்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் துரைசாமி, அப்பாவு, புலவர் ரவீந்திரன், கவிஞர் இள.மணி மற்றும் வாசகர் வட்ட செயலாளர் மணிமாறன் சம்பத்குமார், வக்கீல் பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News