புதுச்சேரி

கோப்பு படம்.

அநாகரீக பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்

Published On 2023-06-14 14:58 IST   |   Update On 2023-06-14 14:58:00 IST
  • வையாபுரி மணிகண்டன் கண்டனம்
  • வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறிய ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் காத்துக்கிடந்த வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவுடன் கூட்டணி தொட ரக்கூடாது என்ற எண்ணத்தோடு அண்ணாமலை செயல்ப டுவது அப்பட்டமாக தெரிகிறது.

தனது அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி, உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கோடான கோடி அ.தி.மு.க. தொண் டர்களின் உள்ளக் கொதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News