புதுச்சேரி

கோப்பு படம்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்-மகளிடம் நகை பறிக்க முயற்சி

Published On 2023-07-01 13:31 IST   |   Update On 2023-07-01 13:31:00 IST
  • வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
  • அந்த வாலிபர் சத்யா காதில் அணிந்திருந்த கம்மலை அறுக்க முயன்றார்.

புதுச்சேரி:

பாகூர் அருகே குடியிருப்பு பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு சத்யா (வயது 18) என்ற மகள் உள்ளார்.

இவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.  காரைக்காலில் இருந்து சத்யா பஸ்ஸில் ஊர் திரும்பினார்.

கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய சத்யாவை இவரது தாயார் உஷா மொபட்டில் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

நாகப்பனூர் - சேலியமேடு பேட் வழியாக வந்து கொண்டி ருந்தபோது எதிரே வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென மொபட்டை வழிமறித்து உஷா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சி செய்தார். ஆனால் உஷா சுதாரித்துக் கொண்டார். ஆனாலும் அந்த வாலிபர்சத்யா காதில் அணிந்திருந்த கம்மலை அறுக்க முயன்றார்.

அப்போது ரத்தம் கசிந்ததால் சத்யா கதறி னார். பின்னர் உஷாவும் சத்யாவும் தாங்கள் அணிந்திருப்பது கவரிங் நகை தான். எனவே வேண்டுமென்றால் செல்போனை எடுத்து கொண்டு எங்களை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதனர்.

இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நடந்த சம்பவத்தை கேட்டறிந்து அந்த வாலிபரை விரட்டி சென்றனர். தன்னை பிடிக்க பின் தொடர்ந்து வருவதை கண்டதும் பதட்டத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.

உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்த சக்தி முருகன் (வயது 36) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News