புதுச்சேரி

 அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-31 11:56 IST   |   Update On 2023-07-31 11:56:00 IST
  • புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.
  • செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் லெனின் வீதியில் நடந்தது.

மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்.சக்தி சேகர் சிறப்புரையாற்றினார். அ.ம.மு.க.தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சாரம் பாலத்தில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள கொடநாடு கொள்ளை கொலை வழக்கை துரிதப்படுத்த கோரி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News