புதுச்சேரி
அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் வில்லியனூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தெற்கு மாநில செயலாளருமான யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, வார்டு நிர்வாகிகள் நியமிப்பது மற்றும் மாநிலம் முழுவதும் கட்சி கொடியை ஏற்றுவது என்று ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அவை தலைவர் அரிகிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, துணை செயலாளர் பொற்கிலை என்ற பூரணி, மாநில பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.