புதுச்சேரி

தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை

Published On 2023-06-22 10:29 IST   |   Update On 2023-06-22 10:29:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை அரசு ஆதிதிராவிடர் நல துறை மூலம் தொடர் நோய் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் உப்பளம் தொகுதியை சேர்ந்த புதிதாக தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கையை ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவன் ஏற்று கொண்டார். அதன்படி உப்பளம் தொகுதியை சேர்ந்த தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜீ, தி.மு.க மூத்த நிர்வாகி ரவி, மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News