புதுச்சேரி
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய காட்சி.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்-அன்பழகன் திறந்து வைத்தார்
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் மற்றும் வெள்ளரி பழம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, வீரம்மாள், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி, மாநில இலக்கிய அணி துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ராஜா, தொகுதி தலைவர்கள் காந்தி, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.