புதுச்சேரி

கோப்பு படம்.

போக்சோ வழக்கு சாட்சியை மிரட்டிய குற்றவாளி கைது

Published On 2023-08-11 14:21 IST   |   Update On 2023-08-11 14:21:00 IST
  • உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
  • தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று சூர்யாவை போன் மற்றும் நேரில் சென்று கார்த்திக் மிரட்டி உள்ளார்.

புதுச்சேரி:

புதுவை சாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (31). சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கார்த்திக் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு மீதான குற்றப்பத்திரிகை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு, சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வெண்ணிலா நகரை சேர்ந்த சூர்யா என்பவர் சாட்சிகளில் ஒருவர். இந்த நிலையில் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று சூர்யாவை போன் மற்றும் நேரில் சென்று கார்த்திக் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து உருளை யன்பேட்டை காவல்நிலையத்தில் சூர்யா புகார் தெரிவித்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News