புதுச்சேரி

கோப்பு படம்.

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

Published On 2023-08-21 11:35 IST   |   Update On 2023-08-21 11:35:00 IST
  • லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ஆடுகளம் பகுதியில் ரோந்து சென்றனர்
  • இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

புதுச்சேரி:

லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்வர் பாஷா மற்றும் போலீசார் நேற்று இரவு லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரில் ஆடுகளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அந்த வாலிபரிடம் சோதனை நடத்திய போது அவர் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த கத்தியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணயைில் அவர் லாஸ்பேட்டை அசோக்நகர் கவிக்குவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற குமார்(வயது27) என்பதும், இவர் குற்றம் செய்யும் நோக்கில் கத்தியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News