புதுச்சேரி

மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Published On 2023-01-21 08:37 GMT   |   Update On 2023-01-21 08:37 GMT
  • விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.
  • சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

புதுச்சேரி:

புதுச்சேரி நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன்.

இவன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்க மின்மையால் அவதிப்பட்டு வந்தான்.

நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

Tags:    

Similar News