புதுச்சேரி

மாநாட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசிய காட்சி.

அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் 6-ந் தேதி பேரணி

Published On 2023-06-30 13:32 IST   |   Update On 2023-06-30 13:32:00 IST
  • கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்
  • மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் சம்பளம் வழங்கப்படவில்லை.

பாசிக் 115, பாப்ஸ்கோ 68, அமுதசுரபி 31, ரேஷன்கடை 55, கே.வி.கே. 45, பாண்டெக்ஸ் 47, பாண்பேப் 60, ஹவுசிங்போர்டு 52, ஏஎப்டி 12 மாதம் என சம்பளம் வழங்கப்படவில்லை. பணி ஓய்வில்சென்றவர்களுக்கு பணிக்கொடையும் வழங்க வில்லை.

இதனால் இங்கு பணிபுரிந்த ஊழியர்களின் குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன.

இதை கண்டித்து பல கட்டபோராட்டங்களை ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை மாநாடு நடத்தமுடிவு செய்யப்பட்டது.

இதன்படி புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு இன்று சுதேசி மில் அருகே நடத்தப்பட்டது.

மாநாட்டிற்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, எதிர்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் சி றப்புரையாற்றினர்.

மாநாட்டில் புதுவை அரசு சார்பு நிறுவனங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புக்குழு அமைத்து கலந்துபேசி தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியை வரும் 6-ந் தேதி நடத்தி முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டில் பாசிக் சங்கம் முத்துராமன், ரமேஷ், பாப்ஸ்கோ சங்கம் ரமேஷ், ஜெய்சங்கர், துரைசெல்வம், பாஸ்கர பாண்டியன், அமுதசுரபி சிவஞானம், பிரபு, விற்பனைக்குழு சண்முகம், கே.வி.கே. யோகேஷ், கதிரேசன், ரேஷன்கடை சங்கம் முருகானந்தம், பிரேம் ஆனந்த், பி.ஆர்.டி.சி. ராஜேந்திரன், திருக்குமரன், பாண்டெக்ஸ் அழகப்பன், சிவக்குமார், பி.ஆர்.டி.சி.சக்திசிவம், பாஸ்கரன், வீட்டுவசதி வாரியம் அண்ணாதுரை, ராஜா, பாண்டெக்ஸ் முருகன், நெடுஞ்செழின், பாண்பேப் அண்ணாமலை, ராமதாஸ், பஞ்சாலை தொழிலாளர் சங்கம் ஏழுமலை, ஜெயசதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா, அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன் வாழ்த்தி பேசினர். 

Tags:    

Similar News