புதுச்சேரி

கோப்பு படம்.

குடிபோதையில் ரகளை செய்த 5 பேர் கைது

Published On 2023-06-30 10:55 IST   |   Update On 2023-06-30 10:55:00 IST
  • குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
  • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் போலீசார் நெட்டப்பாக்கம் நெற்களம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த குமரவேல் (வயது 29) மற்றும் சதீஷ் (வயது 30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மடுகரை பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த சிறுவந்தாடு பகுதியை சேர்ந்த லோகநாதன் (21), பிரகாஷ் (25) மற்றும் நெட்டப்பாக்கம் சிவபெருமான் நகரில் குடிபோதையில் ரகளை செய்த செர்ணாவூர் பகுதியை சேர்ந்த ரகு (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News