புதுச்சேரி

கோப்பு  படம்

கைபந்து விளையாட்டில் 2 தரப்பினர் மோதல்

Published On 2023-07-18 08:46 GMT   |   Update On 2023-07-18 08:46 GMT
  • திருக்கனூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்
  • அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி என்பவருடைய வீட்டில் விழுந்தது.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி  என்பவருடைய வீட்டில் விழுந்தது.

இதனை அம்சவள்ளியும் அவரது கணவர் கனகராஜ் மற்றும் உறவினர்கள் முரளி, மூர்த்தி ஆகியோர் கண்டித்தனர். கைப்பந்து விளையாடிய இளைஞர்களுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த திருவண்ணாமலை பாதையில் வசிக்கும் வீரா சாமி  என்பவர் அம்சவள்ளி தரப்பினரிடம் கேட்டுள்ளார்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி, கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் கனகராஜின் கார் தாக்கப்பட்டு சேதமடைந்தது.

இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News