புதுச்சேரி

மரத்தில் மோதிய பஸ்சை படத்தில் காணலாம்.

தனியார் பஸ் மரத்தில் மோதி 10 பேர் காயம்

Published On 2023-11-20 08:54 GMT   |   Update On 2023-11-20 08:54 GMT
  • பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.
  • போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

புதுச்சேரி:

கடலூரில் இருந்து புதுவைக்கு இன்று காலை பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை பட்டாம்பாக்கத்தை சேர்ந்த குணாளன் ஓட்டி வந்தார்.

பஸ் கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நரசிம்மன் என்பவர் கடலூர்-புதுச்சேரி ரோட்டை கடக்க முயன்றார். இதனால் அவர் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் குணாளன் இடது பக்கம் திருப்பினார்.

ஆனாலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நரசிம்மன் மீது மோதி பின்னர் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளும் காயம் அடைந்தனர்.

மேலும் பஸ் கண்ணாடி உடைந்து சேதம் ஆனது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். தகவல் அறிந்தவுடன் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஙபின்னர் காயம் அடைந்த நரசிம்மன் மற்றும் பஸ் பயணிகளை மீட்டு ஆம்பு லன்ஸ் மற்றும் ஆட்டோவில் ஏற்றி பிள்ளை யார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போக்கு வரத்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News