செய்திகள்
திருச்சூர் பூரம் விழாவில் யானை மீது சாமி பவனி வந்த காட்சி.

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த திருச்சூர் பூரம் விழா

Published On 2021-04-23 11:23 IST   |   Update On 2021-04-23 11:23:00 IST
ஆண்டுதோறும் பூரம் விழாவை காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருவனந்தபுரம், ஏப். 23-

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் பூரம் விழா நடைபெற்று வருகிறது. திருச் சூரில் உள்ள வடக்கு நாதன் சிவன் கோவில் பூரம் விழா மிகவும் பிரசித்தி பெற்றதா கும்.

ஆண்டுதோறும் நடை பெறும் பூரம் விழா கடந்த ஆண்டு கொரோனா பர வல் காரணமாக நடை பெற வில்லை. இந்த ஆண்டு கடு மையான கட்டுப் பாடுகளுடன் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்த முடிவு செய் யப்பட்டது.

இதற்கான பட்டாசு வெடிப்பு ஒத்திகைகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதி காலை கோவில் பூரம் விழா தொடங்கியது.

இதில் நெய்தில காவு பகவதி அம்மன் சிலையை தாங்கிய எர்ணாகுளம் கோவில் யானை கஜவீரன் சிவ குமார், வடக்கு நாதன் சிவன் கோவி லுக்குள் தெற்கு நடை வழியாக தும்பிகையால் தட்டி திறந்து உள்ளேச் சென்றது.

இந்த ஆண்டு பூரம் விழாவில் வழக்கமாக நடைபெறும் யானை ஊர்வலங்கள் நடத்தப் படவில்லை. பூரம் விழாவில் பங்கேற்க வந்தவர்கள், கோவில் நிர்வாகிகள் அனை வரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்பித்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

ஆண்டுதோறும் பூரம் விழாவை காண ஆயிரக் கணக்கானோர் வருவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். * * * திருச்சூர் பூரம் விழாவில் யானை மீது சாமி பவனி வந்த காட்சி.

Similar News