செய்திகள்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-10-20 12:01 IST   |   Update On 2016-10-20 12:01:00 IST
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (புதன்கிழமை) கும்பாபிஷேம் நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, தனபூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கின.

தொடர்ந்து 5 நாட்களாக துர்க்கா லட்சுமி, சரஸ்வதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரசன்னாபிஷேகம், முதற்கால யாக பூஜைகள், 2-ம், 3-ம் கால யாக பூஜை கள் நடைபெற்றன.

நேற்று (புதன்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனைகள் காட்டப்பட்டு காலை 10.15 மணி அளவில் விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் அம்மனுக்கு மகாபிஷேகம் நடை பெற்றது. இரவு அம்மன் திருவீதி உலாவுடன் விழா நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காரைக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் அன்னதானங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு வர்ணனை கவிஞர் ராம நாதன், வள்ளி பால கிருஷ்ணன், வித்யாலட்சுமி ஆகியோர் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் அருணாச்சலம், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் கலைச் செல்வன், விஸ்வநாதன், துணைச்செயலாளர்கள் கருப் பையா, பெரியகருப்பன், டிரஸ்டிகள் சண்முகநாதன், சுப்பிரமணியன், நாச்சியப்பன், ரவிசர்மா, ரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர். காரைக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான செந்தில் நாதன், நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தொழில் அதிபர் படிக்காசு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா, சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, அ.தி.மு.க. மாவட்ட இளை ஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் செல்வி பாண்டி, எம்.கே.எஸ். ஜூவல்லரி குடும்பத்தார்கள், உஷா மார்பிள்ஸ் குடும்பத்தார்கள், செஞ்சை கண்ணன் மற்றும் லலிதா, முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 500-கும் மேற் பட்ட போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Similar News