செய்திகள்

திருமயம் ஸ்ரீசத்திய பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம்

Published On 2016-08-15 11:59 IST   |   Update On 2016-08-15 11:59:00 IST
திருமயம் ஸ்ரீசத்திய பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருமயத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆடிப்புறத்திருவிழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டாகப்படி சார்பில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் பல்லாக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான ஆண்டாள் திருக்கல்யாணம் கடந்த 10ம் தேதி நடைபெற்று வீதியுலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் பால், தேன் தயிர், சந்தனம் மலர்கள் ஆகிய 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சாமி மேள தாளங்கள் முழங்கசாமி பல்லாக்கில் தூக்கி வந்து தேரில் அமர்த்தி பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோ‌ஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதியான பெரியதெரு, நடுவீதி, சிவன்கோவில் தெரு,பெருமாள் கோவில் தெரு வழியாக தேரடிக்கு வந்து சென்றது. பக்தர்கள் கைத்தட்டி உற்சாகத்தை தெரிவித்தனர். பின்னர் சாமியை புஷ்கரணி ஊருணிக்கு கொண்டு சென்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருமயம் எம்.எல்.ஏ.ரகுபதி ஒன்றியசெயலாளர் சரவ ணன்,தே,மு,தி,க,.மாவட்ட செயலாளர். ராமசாமி, மாவட்ட பொருளாளர் சர்புதீன் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் துரைராஜா, முன்னாள் ஒன்றிய க்குழுதுணைத் தலைவர் இராஜமாணிக்கம் ஒன்றிய பொருளாளர் காத்தப்பன் மாவட்ட பிரதிநிதிஆர்.மேகநாதன், சுப.செம்பையா நிர்வாக அதிகாரி பாண்டிராஜ்,உதவிஆணையர் ரமேஷ், ஆலயமேற்பார் வையாளர் ராஜேந்திரன் மற்றும் வர்த்தக சங்கத்தலைவர் கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சஙத்தலைவர் வீரசுப்பையா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News