செய்திகள்

ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2016-07-23 13:54 IST   |   Update On 2016-07-23 13:54:00 IST
ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வரிசையாக நின்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பக்தர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து காலையில் மாரியம்மனை தரிசனம் செய்தபின் தங்களது பாதயாத்திரையை தொடங்கினர்.

சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Similar News