செய்திகள்

முதன்முறையாக மாற்றி யோசித்த சர்பராஸ் அகமதுக்கு ஆட்டம் கைக்கொடுக்குமா?

Published On 2019-06-16 09:35 GMT   |   Update On 2019-06-16 09:35 GMT
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் முதன்முறையாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த சர்பராஸ் அகமதுக்கு போட்டி கைக்கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
மான்செஸ்டரில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஐந்து முறை இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஒரு முறை 2-வது பேட்டிங் செய்தது.

மேலும், 6 முறையும் டாஸ் வென்ற அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. ஆனால், இந்த முறை சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். மான்செஸ்டர் ஆடுகளம் சேஸிங் செய்ய மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதாலும், மழை அச்சுறுத்தல் இருப்பதால் முதலில் பந்து வீசுவதே சிறந்ததாக இருக்கும் என்பதாலும் சர்பராஸ் அகமது இந்த முடிவை எடுத்துள்ளார்.

மிகுந்த நெருக்கடி கொண்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முதன்முறையாக மாற்றி யோசித்ததற்கு பலன் கிடைக்குமா? என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.
Tags:    

Similar News