செய்திகள்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் - ரிக்கி பாண்டிங்

Published On 2019-06-08 07:58 GMT   |   Update On 2019-06-08 07:58 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
லண்டன் :

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தனது இரண்டு ஆட்டங்களிலும் (ஆப்கானிஸ்தான்,மேற்கிந்திய தீவுகள்) வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் நாளை இந்திய அணியை எதிர்கொள்கிறது.



இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும் என ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய  அணியின் துணை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வீழ்ந்தனர். அதேபோன்ற யுக்தியை ஓவலில்  நடைபெற உள்ள போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி  பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News