உலகம்
உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை: இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உற்சாக வரவேற்பு
- இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டார் டிரம்ப்.
- காசா அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு சென்றார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்கு இணையான இஸ்ரேல், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான அமைதி அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது எகிப்தில் நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.
இதற்கான அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர், இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் சென்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். அப்போது இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று, உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை" என உற்சாக வரவேற்பு அளித்தனர்.