உலகம்

நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு வெனிசுலா அரசு மிரட்டல்

Published On 2025-11-22 15:27 IST   |   Update On 2025-11-22 15:27:00 IST
  • ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.

Tags:    

Similar News