உலகம்

அதிபர் ஜோ பைடன்

கொரோனாவில் இருந்து மீண்டும் குணமடைந்தார் அதிபர் ஜோ பைடன்

Published On 2022-08-07 07:57 GMT   |   Update On 2022-08-07 07:57 GMT
  • அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
  • இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். ஜூலை 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Tags:    

Similar News