உலகம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்திற்கு அழைப்பு: ஐ.நா.வில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் நிராகரிப்பு
- இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
- போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.
நியூயார்க்:
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 11வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தீர்மானம் கொண்டு வந்தது.
தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடவில்லை. ஹமாஸை முறையாக விமர்சிக்கவில்லை என அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷியாவின் வரைவு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கவுன்சில் நிராகரித்துள்ளது.