null
வியட்நாம் எல்லையில் ரோந்துப் பணிகளுக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா!
- ரோபோக்கள் தன்னிச்சையாக பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும்
- ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
வியட்நாம் உடனான எல்லை ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷென்செனை தளமாகக் கொண்ட UBTECH ரோபாட்டிக்ஸ் கார்ப்பரேஷன், வியட்நாமுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியான குவாங்சியில் உள்ள ஃபாங்செங்காங் எல்லைக் கடவையில் அதன் வாக்கர் S2 மனித உருவ ரோபோக்களை நிலைநிறுத்த $37 மில்லியன் ஒப்பந்தத்தை அரசிடமிருந்து பெற்றுள்ளது.
வாக்கர் S2 என்பது கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதியுடன் இணைந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ ஆகும். இந்த ரோபோ மனித நடமாட்டம் அதாவது மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியமர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தாங்களே பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் என்றும், 125° கோணத்தில் வளையும், 15 கிலோ எடையை கையாளும் திறனும் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
ஃபாங்செங்காங்கில், பயணிகள் வரிசைகளை வழிநடத்துதல், வாகனங்களை இயக்குதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் எல்லை அதிகாரிகளுக்கு ரோபோக்கள் உதவும். சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து செல்லும்.
மற்ற ரோபோக்கள் சரக்கு பாதைகளுக்குள் செயல்படும். கொள்கலன் அடையாள எண்களைச் சரிபார்த்தல், முத்திரைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலை புதுப்பிப்புகளை அனுப்புதல் (Status Updates) மூலம் தளவாடக் குழுக்களை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.