உலகம்

ஹமாஸ் அமைப்பினர் எந்த நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் - ஐ.நா. கோரிக்கை

Published On 2023-10-16 06:42 IST   |   Update On 2023-10-16 06:42:00 IST
  • எவ்வித நிபந்தனை இன்றி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  • காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும்.

நியூயார்க்:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில்,மத்திய கிழக்கில் நாம் படுகுழியின் விளிம்பில் இருப்பதால், எனக்கு இரண்டு மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன. எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News